யோகாசனம் செய்வதால் பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம். சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்எளிய முறை உடற்பயிற்சி
நமது
உடலுக்கும் உயிருக்கும் இடையே ஒத்த உறவு, இனிமையான உறவு , நன்முறையில்
நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இருக்க
வேண்டும்.
உடற்பயிற்சியைத்
தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த ஓட்டங்களை சரிப்படுத்திக் கொள்ளலாம்.
அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறை உடற்பயிற்சியில்
- கைப் பயிற்சி
- கால் பயிற்சி
- தசைநார், நுரையீரல் பயிற்சி
- கண் பயிற்சி
- கபாலபதி
- மகராசனம்
- அக்கு பிரஷர், மசாஜ் பயிற்சி
- உடல் தளர்த்தல்
எளிய முறை உடற்பயிற்சி : Download Link : Yoga - Exercises Demo by Vethathiri Maharishi
